25.09.2020
SPB!
கடைசியில் போய்விட்டார்! இன்றைய நாளில் அதைப்பற்றி முக நூல் அஞ்சலிக் குறிப்புகள் எல்லாமே மனசைக் கீறின. வயது வித்தியாசமின்றி எல்லோரினது மனசை கவர்ந்தவர். இது எப்படி சாத்தியமாச்சு. ஆயிரக்கணக்கான சினிமாபf் பாடகர்கள் இருக்க இவருக்கு மட்டும் ஏன் இப்படி?
முதலாவது காரணம் அவர் பாடல்கள் பாடிய முறைமை அடுத்து அவர் பாடிய ஒவ்வொரு பாடலுடன் ஏதோ வகையில் ஒவ்வொருவருக்கும் மானசீகமான தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் பாடிய முதல் பாடல் முதல் அவர் பாடிய கடைசி பாடல் வரை காலம் காலமாக அவரது தனித்துவத்தை பேணி வந்தவர்.
: அவர் ஒரு பாடக நடிகர். அவர் பாடல்களை பாடியது மட்டுமல்ல அவர் ஒவ்வொரு பாடலையும் நடித்தார் என்பது மிகைக் கூற்றல்ல.
உண்மையை சொல்லுகிறேன். அவர் பாடல்கள் பாடிய முறைமையை பின்பற்றிதான் நான் எனது கவிதை வாசிப்புகளில் கையாண்டு வந்துள்ளேன்.
அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் முகநூலில் அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளுக்கு எனது இந்த அவருக்கான அஞ்சலிக் குறிப்பும் ஈடாகாது.
எல்லா மரணங்களும் அவரவருக்கு பேரிழப்பு தான்.. இவரது மரணம் மட்டும் எல்லோருக்குமான பேரிழப்பாகி விட்டது.
பாலா!
ஒவ்வொரு பாடலிலும் நீங்கள் உச்சரித்த ஒவ்வொரு சொல்லின் உண்மையான அர்த்தத்தையும் உணர்ச்சியையும் உணர்வையும் அவற்றோடு கலந்து உச்சரித்து பாடியதுதான் உங்கள் தனித்துவம்.
ஒவ்வொரு கலைஞனின் மாற்றீடாக இன்னொரு கலைஞர் வந்துவிடக்கூடும்.அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலான உங்கள் பாடல் காலகட்டத்தில் உங்களுக்கு மாற்றீடாக ஒருவரும் வரவில்லை. பாலா. இனி யாரும் வரப்போவதும் இல்லை பாலா!
உங்களைப் பற்றி எவ்வளவோ சொல்லாம் அதுதான் உண்மை ஆனால் ஆனால் சொல்ல முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.
சினிமா பாடல்கள் வரலாற்றில் நீங்கள் ஒரு தனிமனித சகாப்தம்.
.உலகில் சினிமா பாடல் இருக்கும் வரை உங்கள் பெயர் அழியாது.
போய் வாருங்கள் பாலா!
(The featured image at the top shows Memon Kavi with SPB)